Wednesday, March 9, 2011

பெண்களுக்கான திட்டங்கள் அவர்களை சென்று சேருகிறதா?

நேற்று மகளிர் தினத்தை ஒட்டி பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, சலுகைகள் என்று நிறைய அறிவிப்புகள் வெளியிட்டார்கள்.

இவ்வளவ அறிவிப்புகள் செய்யும் அமைச்சர்கள், அநத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அவை பெண்களுக்கு சரியாக சென்று சேருகிறதா என்று கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.

உதாரணத்திற்கு மம்தா பானர்ஜி பதவி ஏற்றபோது அறிவித்திருந்த பெண்களுக்கான தனி ரயில் பற்றி பார்ப்போம். மம்தாவிற்கு முன்னரே பெண்களுக்கான ரயில் பெட்டி இயங்கி வந்தது. அது பெருமளவு காலியாகவே இருக்கும். பின்னர் அதிலேயே பாதி ரயில் ஆண்களுக்கும், பாதி பெண்களுக்கும் என்று பிரித்து விடடார்கள்.

மம்தா வந்த பிறகு ஒரு முழு ரயில் பெட்டியும் பெண்களுக்கென ஒதுக்கினார். இப்போது பழையபடி அது பாதி காலியாக சென்று கொண்டிருக்கிறது.

பெண்களுக்கான தனி ரயில் பெட்டியை விடுவதை விட அனைத்து ரயில்களிலும் பெண்களுக்கு தறபோது ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டிகளுடன் கூடுதலாக ஒரு ரயில் பெட்டி சேர்த்தால் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும.

தற்போது பெண்களுக்கென்று இயங்கும் தனி ரயிலினால் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அலுவலக நேரத்தில் எப்படியும் 20 நிமிடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதை தவிர்க்க பாதி காலியாக இயங்கி கொண்டிருக்கும் பெண்கள் ரயிலில் ஆண்களுக்கு பாதி பெட்டிகளாவது பயணம் செய்ய அனுமதிக்கலாம்.

திட்டத்தை அறிவிப்பதோடு சரி அது பெண்களுக்கும் உபயோகப்படுவதில்லை ஆண்களுக்கும் அதனால் தொந்தரவே ஏற்படுகிறது.

மம்தா பானர்ஜி தறபோது ரயிலில் பயணம் செய்யும் கல்லூரி பெண்களுக்கு இலவச பாஸ் அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு பெண்கள் கீழ்மட்டத்தில் உள்ளது போல தோற்றத்தை உண்டாக்கி விடுகிறது.

இதுபோன்று பெண்களுக்கென்று வெளியிடப்படும் திட்டங்களில் அனைத்திலும் ஓட்டை உள்ளது. திட்டங்களை அறிவிக்கும் முன் அந்த திட்டம் ஒழுங்காக சென்று சேருகிறதா என்று கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். அல்லது அறிவித்த திட்டங்கள் பெண்களுக்கு பயன்படுகின்றனவா என்று அதிகாரிகளை கலந்து ஆலோசனையாவது செய்கிறார்களா என்று தெரியவில்லை பெரும்பாலான அமைச்சர்கள் வேகவேகமாக யாரோ எழுதிக்கொடுத்த திட்டங்களை படித்து விட்டு, கான்டீனுக்கு டீ சாப்பிட சென்று விடுகிறார்கள். இது மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

No comments:

Post a Comment