Monday, March 14, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 12

கடந்த 10-ம் தேதி நடந்த இலங்கை – ஜிம்பாப்வே ஆட்டம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முடிந்து போனது. கடந்த காலங்களில் ஜிம்பாப்வே அணி சூபபராக இல்லாவிட்டாலும் சுமாராகவாவது விளையாடி கொண்டிருந்தது.

பிளவர் சகோதர்கள், கேம்பல், பேட்டிங்கிலும் ஸட்ரீக், ஒலாங்கா, போலிங்கிலும் எதிரணியினர் எப்போதாவது நிலைகுலைந்து போவார்கள். ஆனால் தற்போது கனடா, கென்யா நாடுகளை தவிர மற்ற யாருடனும் போராடாமல் தோற்றுப் போகிறார்க்ள்.

இவர்களுக்கு பின் வந்த பங்களாதேஷ் நல்ல முன்னேற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்த சில அரசியல் நிகழ்வுகளால் அந்த அணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. இப்படியே தொடர்ந்தால் இவர்கள் அடுத்த உலகக் கோப்பையில் இம்பெறுவது சந்தேகம்தான்.

11-ம் தேதி நடந்த இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து அணியிடம் வெற்றிப் பெற்றிருந்த அயர்லாந்திற்கு இதில் வெற்றிப் பெற்றால் காலிறுக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவிடம் தோற்றதை போல வெஸ்ட் இண்டீஸ் அணியிடமும் தோற்றப் போனது பரிதாபத்துக்குரியது.

இங்கிலாந்து - பங்களாதேஷ்

அது என்னமோ தெரியவில்லை, இங்கிலாந்து இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களும் பரபரப்பாகவே இருந்தது.. இங்கிலாந்து – இந்தியா ஆட்டம் டை (Tie) ஆனது. அயர்லாந்துடனான பரபரப்பான ஆட்டத்தில் தோற்று போனது. வலிமையான தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது, பங்காளதேஷூடம் நடந்த ஆட்டமும் அதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

முதலில் ஆடிய இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசி 225 ரன்களுக்கு சுருட்டிய பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் சுமாராக விளையாடினாலும் நடுவில் சொதப்பியது.

இலக்கை எட்ட 57 ரன்கள் என்ற நிலையில் 8 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் அந்த அணியில் அஷ்ரப்புல்லிற்கு மாற்றாக களம் இறங்கிய முகமதுல்லாவும், இஸ்லாமும் சிறப்பாக ஆடி தங்கள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற அந்த நிமிடங்கள் மிகவும் பரபரப்புக்குரியது.

வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணியினர் முகத்தில் ஒரே சந்தோஷம். ரசிகர்களை கேட்கவா வேண்டும். அவர்கள் ஆடிய ஆட்டத்தில் இரண்டு அணி வீரர்களும் ஹோட்டலுக்கு அதிகாலையில்தான் செல்ல முடிந்தது. அவ்வளவு டிராபிக் உண்டு பண்ணி விட்டார்கள்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா


இந்தியா – தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டம் எதிர்பார்த்ததைப் போலவே விறுவிறுப்பான ஆட்டமாக அமைந்தது. ஆட்டத்தின் முடிவு இந்திய ரசிகர்களை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது.

இந்திய அணியின் அபாரமான துவக்கத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார்கள். ஷேவாக்கும் – சச்சினும சேர்ந்து தென் ஆப்பிரிக்க மண்ணில் தோற்றதற்கு பழி தீர்ப்பது போல் ஆடினார்ர்கள்.

பவர்ப்ளே வரை நன்றாக ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஏதோ சொல்லி வைத்து ஆடுவது (மேட்ச் பிக்சிங்) மாதிரி வேக வேகமாக அவுட் ஆனார்கள்.

சரி 296 ரன் நல்ல ஸ்கோர் தானே வெற்றிப் பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்த்தது எல்லாம் பொய்யாகி போனது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் நெஹ்ரா வீசிய நான்கே பந்துகளில் ஆட்டம் முடிவுக்கு வந்தது ரசிகர்களை எரிச்சளுக்குள்ளாக்கியது.

என்னடா ஆடுகிறார்கள் இவர்கள் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை கோட்டை விட்டார்களே என்று ரசிகர்கள் அங்கலாய்ந்து போனார்கள்.

இப்படி தோற்பதும் ஒருவகையில் நல்லதுதான். ஜெயித்துக கொண்டே இருந்தால் அடுத்த ஆட்டத்தில் ஒழுங்காக ஆட மாட்டார்கள். (இது இந்திய அணிக்கு மட்டும்).

ஒவ்வொரு ஆட்ட முடிவிலும் டோனி பேசும்போது நாங்கள் இந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும், அந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என்று கூறுவார். அதேபோல் இந்த ஆட்டம் முடிந்தவுடன் ஒரு பொன் மொழி உதிர்த்துள்ளார். ரசிகர்களுக்காக ஆடக்கூடாது, நாட்டுக்காக ஆட வேண்டும் என்று.

பேச்செல்லாம் வக்கணையாக பேசுகிறார். ஆட்டத்தில்தான கோட்டை விட்டு விடுகிறார்.

No comments:

Post a Comment