கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற 6 ஆட்டங்களில் ஒரு ஆட்டம் கூட உருப்படியாக இல்லை.
இதுவரை மொத்தம் 35 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. பரபரப்பான ஆட்டம் என்று 10 ஆடடங்களை கூட குறிப்பிட முடியாது. இதுவரை நடந்துள்ள முடிந்துள்ள ஆட்டங்களின் முடிவுகள் உலகக் கோப்பையின் மீது ரசிகர்களுக்கு வெறுமையையே உணர்த்துகிறது.
இன்று நடகக இருக்கும் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் இங்கிலாந்திற்கு வாழ்வா – சாவா போட்டி. வெற்றி பெற்றால் காலிறுதி இல்லையென்றால் லண்டன் ரிடர்ன்.
இங்கிலாந்து வெற்றி பெற்றால்தான் அடுத்து வரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும். இல்லையென்றால் அது வெறும் சடங்காகிவிடும்.
பங்களாதேஷ் காலிறுதிக்கு வருவதை விட இங்கிலாந்து வருவதே சாலச் சிறந்தது. பங்களாதேஷ் எப்போதாவதுதான் வெற்றி பெறும். ஆனால் இங்கிலாந்து அப்படியில்லை தன்னுடைய லீக் மேட்சில் தென் ஆபபிரிக்காவை மணணை கவ்வ வைத்தது நினைவிருக்கலாம். மேலும் ஏ பிரிவில் இருந்து காலிறுதிக்கு வரும் அணிக்கு இங்கிலாந்து மட்டுமே சவாலாக நிற்க முடியும்.
Thursday, March 17, 2011
உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 13
Labels:
cricket,
World Cup cricket,
world cup2011,
இங்கிலாந்து,
உலககோப்பை 2011,
கிரிகெட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment