Monday, April 4, 2011

உலகக்கோப்பை 2011 – இறுதி போட்டி

இலங்கைக்கு இறுதி சடங்கு செய்து வைத்த இந்தியா

இறுதிப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டபோதே தெரிந்து விட்டது இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்று. காரணம், இலங்கை அணியின் தேர்வில் பயங்கர குழப்பம் இதுவரை இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டிக்கூட ஆடாத கபுடகேரா, ரந்தீவ் இருவரையும் அந்த அணி களம் இறக்கியதுதான்

இறுதிப் போட்டிக்கு முன்பு வரை நன்றாக ஆடிக் கொண்டிருந்த அந்த அணியின் மெண்டீஸ், ஹராத் இருவரையும் பெவிலியனில் உட்கார வைத்து மிகப் பெரிய தவறை செய்தது இலங்கை.

டாஸில் டோனி தான் முதலில் ஜெயித்தார் ஆனால் ஆட்ட நடுவருக்கு சரியாக கேட்கவில்லை என்ற காரணத்தால் மறுபடியும் டாஸ் போடப்பட்டு இலங்கை ஜெயித்தது. இதனால் இந்திய அணிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டனர். இயல்பாக ஆடாமல் விக்கெட் விழாமல் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியும் விரைவில் அவுட் ஆகி போனார்கள்.

கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றவுடன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஜெயவர்த்தனே அதற்கு சொன்ன காரணம், அடுத்த உலகக் கோப்பையை பெற வேண்டுமென்றால் இப்போதிருநதே தயாராக வேண்டும் அதற்கு தகுதியானவர் சங்ககாரா என்று சொன்னார். அப்படிப்பட்டவர் நேற்று எவ்வளவு ஏமாற்றம் அடைந்திருப்பார்.

ஜெயவர்த்தனேவின் அருமையான ஆட்டம் இந்தியாவின் வெற்றியினால் வீணாகிப் போனது.

இந்திய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் பறி போனதும் அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தாலும பின்னர் கம்பீர், டோனியின் சிறப்பான ஆட்டம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு அம்சமாகும்.

கடந்த ஒன்றரை மாதங்களாக நம்மை மகிழ்சசியில் ஆழ்த்திய உலகக் கோப்பை திருவிழா முடிந்து போனாலும், இந்திய அணி நம் மனதில் ஏற்படுத்திய சந்தோஷம் எனும் வடு நிரந்தரமாக இடம் பெற்று விட்டது.