Monday, March 7, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 9

இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா

நேற்று சென்னையில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்தும் – தென் ஆப்ரிக்காவும் மோதிக் கொண்டன. ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்ரிக்கா அணி சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்தை 171 ரன்களுக்குள் சுருட்டி விட்டது.

எங்கே பங்களாதேஷ் போல 58 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிவிடுவார்களோ என்று பயந்த சென்னை ரசிகர்களுக்கு அபயம் அளிப்பது போல டிராட்டும், போப்ராவும் நான்காவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது அந்த அணி சுமாரான ஸ்கோரை எட்ட உதவியது மட்டுமின்றி கடைசியில் அவர்கள் வெற்றி பெறவும் உதவியது.

பின்னர் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தை எடுத்து ஆடிக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்கா சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று எண்ணி டி.வியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் (நேரில் பார்த்தவர்களை பற்றி நமக்கென்ன தெரியும்) இந்தியா – அயர்லாந்து ஆட்டத்தை பார்க்க சேனலை மாற்றியிருந்திருப்பார்கள்.

நன்றாக ஆடிக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்காவிற்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை குழந்தைகளுக்கு வீட்டு ஞாபகம் வருவது போல் தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு பெவிலியன் ஞாபகம் வந்து விட்டதாக தோன்றுகிறது. யார் போட்டாலும் அவுட் ஆகி பெவிலியனில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

மடமடவென்று 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரனக்ள் என்ற மோசமான நிலைக்கு சென்று விட்டனர். விக்கெட் கீப்பர் வேன் விக்கும், ஸ்டெயினும் போனனால் போகிறது என்று 33 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை விவிறுப்பான நிலைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் 4 நான்கு ஓவரில் 12 ரன்கள் மட்டுமே என்ற பரபரப்பான நிலைக்கு கொண்டு சென்றவர்கள் கொஞ்சம் நேரம் நின்று ஆடக்கூடாது. மாட்டவே மாட்டோம், இதுவே அதிகம் என்பது போல் வேன் விக் அவுட்டாகி விட மற்ற விரர்களும் வந்த உடன் அவுட்ஆகி ஆட்டம் க்ளோஸ் ஆனது.

சென்ற முறை அயர்லாந்துடன் தோற்ற அதிர்ச்சியில் இங்கிலந்து கேப்டன் ஸ்ட்ராசுக்கு பேச்சே வரவில்லை. இந்தமுறை வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பேச்சே வந்திருக்காது என்று நினைக்கிறேன். எப்படியோ இங்கிலாந்து காலிறுதிக்கான போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியா - அயர்லாந்து

அயர்லாந்து டீமை சாதாரணமாக எடுத்துக்கக்கூடாது என்று ஆளாளுக்கு இந்தியாவிற்கு அட்வைஸ் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தியா கேப்டன் டோனியும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே அயர்லாநதுடன் எப்படி ஆடப்போகிறோம் என்று பேட்டி எல்லாம் கொடுக்கத் தொடஙகி விட்டார்.

கண்டிப்பா டாஸ் ஜெயிச்சா இந்தியா பந்து வீசும் என்றெல்லாம் சொல்லிவிட்டார். அதேபோல டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதோ இந்த ஓவரில் ஒரு விக்கெட, அடுத்த ஓவர்ல ஒரு விக்கெட் என்று ஜாகிர்கான் முதல் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரம் எடுத்து விட்டார்.

3வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த அயர்லாந்து அதன் பின்னர் பந்து வீச வந்த யுவராஜ் சிங்கை பார்த்த உடனே ஒரு முடிவுக்கு வந்து விட்டதை போல தோன்றியது. நீங்க போடவே வேண்டாம் நாங்களாகவே அவுட் ஆகி போயிடுவோம் இருந்தாலும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது பாருங்க, அதனால நீங்க போடற மாதிரி போடுங்க நாங்களே அவுட் ஆயிடுவோம் என்று முன்பே பேசிக் கொண்டது போல் யுவுராஜ் பந்து வீச்சில் 5 பேர் அவுட்டானார்கள். ஏன்னப்பா நீங்களே விக்கெட் எடுக்கறீங்க நானும் ஒரு விக்கெட் எடுத்துக்கறேன் என்று முனாப் பட்டேல் கடைசி ஒரு விக்கெட்டை எடுத்துக் கொண்டார்.

கடைசியில் 207 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்ட அயர்லாந்து இதுவே இந்தியாவிற்கு அதிகம் என்று சொல்வது போல இருந்தது அவர்களுடைய பந்து வீச்சு.

ஆட்டம் துவங்கியவுடன் ஷேவாக்கிற்கு பெவிலியனில் காபி சாப்பிடும் ஞாபகம் வந்து விட்டது போலிருக்கிறது. உடனே அவுட் ஆகி விட்டார். பின்னாடியே கம்பீரும் நானும் வரேன் என்று சென்று விட பாவம் சச்சினும், கோலியும் குருவி சேர்ப்பது மாதிரி ரன்களை சேர்த்தனர்.

சச்சினுக்கு போரடித்து இருக்க வேண்டும். ஸ்டம்பிற்கு நேராக பந்தை காலில் வாங்கிக் கொண்டார். அம்பயர் அவுட் காட்டிவிட சச்சின் நேராக கோலியிடம் சென்று எனக்கு போரடிக்குது ரெவ்யூ (Review) எல்லாம் வேண்டாம் நான் போறேன் என்று கழண்டு கொண்டார்.

பின்னர் வந்த யுவராஜ் சிங்கிற்கு ஒரே டோனி ஞாபகம். கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடப் பிடிக்கவில்லை போலும். பழைய சண்டை ஏதாவது ஞாபகம் வந்திருக்க வேண்டும் ஒரு ரன்னிற்கு ஸ்டார்ட் கொடுத்து பாதி க்ரீஸ் ஓடி வந்து விட்டு திரும்பி சென்று விட்டார் பாவம் கோலி பாதிக்கு மேல் ஓடி வந்து திரும்ப முடியவில்லை ரன் அவுட். ஏன் இப்படி பன்றே என்று கேட்க அதற்கு யுவராஜ் (சீனியர் ப்ளேயராம்) அதுதான் திரும்பி போக சொன்னேன் இல்லே என்று முறைக்க வேறு செய்தார்.

அப்பா டோனி வந்தியா வா நிறைய ஓவர் இருக்கு ரெண்டு பேரும் சேர்ந்து மெதுவா ஆடுவோம்னு யுவராஜூம், டோனியும் 100 பந்திற்கு 67 ரன்கள் சேர்த்தனர். அயர்லாந்து கிட்ட ஜாக்கிரதையா ஆடனும்னு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே ஆடியிருப்பார்கள் போலிருக்கிறது ரெண்டு பேரும் பொறுமையா ஆடினார்கள்.

ரசிகர்களுக்குதான் போரடித்து விட்டது. டோனி அவுட் ஆகி யூசப் பதான் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸ் என்று ஆட்டத்தை முடித்து விட்டார். அடப்பாவிங்களா ஏதோ போலிங் பிச்சுன்னு நினைச்சா இதோ இப்ப வந்த இவன் மட்டும் அதே பிட்சுல இப்படி அடிக்கிறான் நீங்க என்னடா இவ்வளவு நேரம் பண்ணீங்க என்று கேட்க வேண்டும் போலத் தோன்றியது.

மொத்தத்தில் மெதுவாக ஆடினாலும் அயர்லாந்துடன் ஜெயித்தது இந்தியாவிற்கு பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை ஆடிய 3 ஆட்டங்களிலும் அயர்லாந்து சிறப்பாகவே விளையாடியிருக்கிறது. அந்த அணி பங்களாதேஷூடன் தொற்காமல் வெற்றிப் பெற்றிருந்தால் இந்நேரம் காலிறுதிக்கான போட்டியில் முன்னனியில் இருந்திருக்கும். இன்னும் அந்த அணிக்கு வாயப்பு இருக்கிறது. பார்க்கலாம என்ன செய்கிறார்கள் என்று.

No comments:

Post a Comment