Monday, March 7, 2011

தி.மு.க – காங்கிரஸ் விரிசல் யாருக்கு பாதிப்பு?

கடந்த சனிக்கிழமை நடந்த இலங்கை - ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

மேட்ச் எதுவும் இல்லாமல் போரடித்து கொண்டிருந்த நேரத்தில் மேட்சிற்கு மாற்றாக சன் செய்திகளில் ப்ளாஷ் நியூஸ் விறுவிறுப்பாக வந்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் 63 தொகுதிகள் வேண்டுமென்று நிபந்தனை விதித்ததால் காங்கிரஸ் கூட்டணி முறிந்தது என்று கலைஞர் அறிவிப்பு என்று செய்தி வெந்து கொண்டிருந்தது.

தனக்கு தானே குழிபறித்து கொள்வது, சொந்த செலவில் சூனியம் என்றெல்லாம் சொல்வார்கள் இப்போதைய காங்கிரஸ் நிலைமை அப்படிதான் இருக்கிறது. தனியாக நின்றால் டெபாஸிட் கூட கிடைக்காது என்பதை காங்கிரஸ் மறந்து போய் விட்டது போல் தெரிகிறது.

ஏற்கெனவே விலை வாசி உயர்வு, மின்சார தட்டுப்பாடு, என்று ஏகப்பட்ட சிக்கலில் இருக்கும் தி.மு.க. இந்த முறை வெற்றிப்பெறுவதே சந்தேகம்தான்.

வெங்காய விலை உயர்வுகே ஒருமுறை ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதிலும் இப்போது அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் என்னதான் ஒரு ரூபாய் அரிசி, இலவச தொலைக்காட்சி என்று கொடுத்தாலும் நடுத்தர மற்றும், அடித்தட்டு மக்கள் இந்த விலை வாசி உயர்வால் பெரும் பாதிப்புடைந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

இதில் காங்கிரஸ் உடன் கூட்டணி முறிவு தி.மு.க.வை இன்னும் பாதிக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்தததே. காங்கிரஸ் உடன இருப்பதால் ஒன்றும் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் ஒன்றும் தி.மு.கவிற்கு ஏற்பட போவதில்லை. என்ன ஒன்று ஓட்டு வித்தியாசம் குறையக் கூடும் அவ்வளவுதான.

தற்போது காங்கிரஸ் மறு பரிசீலனை செய்யுமாறு தி.மு.க.விற்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. வேறு வழியில்லை இரண்டு கட்சிகளும் சமரசம் செய்து கொள்வதுதான் இருவருக்குமே நல்லது.

No comments:

Post a Comment