Friday, March 25, 2011

உலகக்கோப்பை 2011 – முதல் மற்றும் இரண்டாவது காலிறுதி

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்

ஏதோ காலிறுதிக்கு தெரியாம வந்துட்டோம் அதனால ஆடுறோம் என்பது போல இருந்தது வெஸ்ட் இண்டீஸின் ஆட்டம். பங்களாதேஷே பரவாயில்லை போலிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் படு சொதப்பலாக ஆடியது.

அது என்னமோ தெரியலை அப்ரிடிக்கு எல்லா மாட்சுலயும் விக்கெட் விழுகிறது. மெயின் போலர்ஸை விட அதிகமான விக்கெட் எடுக்கிறார். பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் போலிங்கில் அதை சரிபடுத்தி விடுகிறார்.

டெஸ்ட் மேட்ச் மாதிரி ஆடின சந்தர்பால் மட்டுமே சுமாராக ஆடினார். மற்ற யாரும் சோபிக்கவில்லை. சரி போலிங்காவது சுமாராக போடுவார்கள் என்று எதிர்பார்த்தது தவறாக போனது.

அது என்னமோ தெரியலை இந்தியாவிடம் மட்டும் மாய்ந்து மாய்ந்து போலிங் போட்ட ராம்பால் பாகிஸ்தானுக்கு எதிராக பொட்டி பாம்பாக அடங்கி விட்டார்.

சாமிக்கு கேப்டனாக இதுதான் கடைசி தொடராக இருகக வேண்டும். இனிமேல் இதுபோன்ற கேப்டனை தேர்வு செய்தால் அந்த அணி வருங்காலத்தில் டெஸ்ட் மேட்ச் விளையாட கூட தகுதி இல்லாமல் போய் விடுவார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் சூடுபறக்க மோதி கொண்டன. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்வதாக அறிவித்த பாண்டிங் கூடவே 250 ரன்கள் எடுத்தாலே போதும் என்று கூறியது அவருடைய தவறான கணிப்பாக அமைந்து விட்டது.

பிட்ச் மற்றும் இந்திய பௌலிங்கையும் மதிப்பீடு செய்து 250 ரன்கள் என்று ஓரளவு சரியாக கூறிவிட்ட அவர் இந்திய அணியின் பலமான பேட்டிங் வரிசையை மறந்து விட்டார் போலிருக்கிறது.

300 ரன்கள் எடுத்திருந்தால் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருககுமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் ஷேவாக் நின்று ஆடவில்லை, ஆடியிருந்தால் சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம்.

மேலும் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்சில் ஆஸ்திரேலிய அணியில் வார்னே போன்ற ஸ்பின்னர்கள் இல்லாததும் பெரிய இழப்பு.

கடந்த ஒரு வருடமாக ஃபார்மில் இல்லாத யுவராஜ் சிங் தட்டு தடுமாறிதான் உலக கோப்பையில் இடம் பெற்றார். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.. அணியின் முக்கியமான ஆல் ரவுண்டராக பிரகாசிக்க தொடங்கி விட்டார்.

இந்தியா பைனலுக்கு தகுதி பெற்றால் கண்டிப்பாக யுவராஜ் சிங்தான் தொடர் நாயகனாக அறிவிக்கப்படுவார். அப்ரிடி பௌலிங் மட்டுமே சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் யுவராஜ் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது..

கடந்த 7 ஆட்டங்களில் இதுவரை நான்கு மேன் ஆப் தி மாட்ச் பெற்றுள்ளார் யுவராஜ். டோனி பேட்டிங் ஆர்டர் எதையும் மாற்றி சொதப்பாமல் இருநததும், அஸ்வினை அணியில் சேர்தததும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

No comments:

Post a Comment