Thursday, March 31, 2011

உலகக்கோப்பை 2011 – முதல் மற்றும் இரண்டாவது அரைஇறுதி

நியூசிலாந்து இலங்கை

முதல் அரை இறுதியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி சிறப்பான துவக்கம் இல்லாவிட்டாலும் 43 ஓவர் வரை நன்றாகவே விளையாடினார்கள். பின்னர் என்னவாயிற்றோ தெரியவில்லை மலிங்கா காலை பார்த்து வீசிய பந்துக்கெல்லாம் அவுட் ஆனார்கள்.

ட்ரிபிள் எம் என்று சொல்லப்படும் முரளிதரன், மலிங்கா, மெண்டீஸ் மூவரின் பந்து வீச்சும் அபாரமாக உள்ளது.

கால் இறுதியில் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய நியூசிலாந்து முக்கியமான இந்த அரை இறுதியில் அதை செய்ய தவறி விட்டார்கள்.

முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் போதும் இலங்கை அணி திணறி விடும். அது இந்த ஆட்டத்தில் வெளிப்படையாக தெரிந்தது. இன்னும் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு இந்த முறையும் இலங்கை அணி தடுமாறி போனது.

இந்த இடத்தில் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் சமரவீராவும், மேத்யூசும் சேர்ந்து நிலைமையை சமாளித்து தங்கள் அணி வெற்றி பெற உதவினர். முக்கியமான இந்த கட்டத்தில் நியூசிலாந்து விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இறுந்திருக்கும்.

இந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் இல்ங்கை அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த அணியில் தற்போது முரளிதரன், மேத்யூஸ் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இறுதி போட்டியில் இடம்பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி அவர்கள் விளையாட முடியாத பட்சத்தில் சமிந்தா வாஸ் மற்றும் ரந்தீவ் இருவரையும் சேர்க்க முடிவு செய்திருக்கிறார்கள். இது இந்திய அணிக்கு வெற்றிக்கு அனுகூலமாகிவிடும்.

இந்தியா பாகிஸ்தான்

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் கடைசிவரை விறுவிறுப்பாக இருநதது. ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்று களமிறங்கிய இந்திய அணியினர் துவக்கம் சிறப்பானதாக இருந்தது.

சேவாக் தனக்கு வந்த அனைத்து பந்துகளையும் அடித்து ஆடினார். அவர் அவுட் ஆனவுடன் வேகமாக சென்று கொண்டிருந்த ரன் ரேட் மெதுவாக இறங்கி ஒரு கட்டத்திற்கு ஐந்தை விட குறைந்து விட்டது.

ஒரு பக்கம் சீராக விக்கெட்டுகளையும் இழந்து கொண்டிருந்தார்கள். 42வது ஓவரில் பொறப்பற்ற முறையில் டோனி அவுட் ஆனார். 205 ரன்னிற்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 250 கூட எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. நல்ல வேளை ரைனா நின்று ஆடியதால் ஸ்கோர் 260 அடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் அணியினரின் மோசமான பீல்டிங் அவர்கள் வெற்றி வாயப்பை பறித்தது. சச்சினின் விக்கெட்டை வீழ்த்த கிடைத்த 4 கேட்சுகளையும் தவற விட்டதற்காக அவர்களுக்கு தோல்வி என்னும் தண்டனை கிடைத்தது.

அது என்னமோ தெரியவில்லை இந்தியாவிற்கு எதிராக புதிததாக பந்து வீச வருபவர்கள் நன்றாக போலிங் செய்கிறார்கள். பார்மில் இல்லாத பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கிறார்கள். அப்படியும் இந்தியா வெற்றி பெற்று விடுவது டோனியின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அதிர்ஷ்டம் இறுதி போட்டி வரைக்கும் தொடரும் போலிருக்கிறது. இலங்கை அணியின் முக்கியமான பந்து வீச்சாளர் முரளிதரனும், மேத்யூசும் விளையாட பட்சத்தில் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

No comments:

Post a Comment