Friday, March 18, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 14

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ்

நேற்று நடைபெற்ற ஆட்டத்தை யார் பார்த்தார்களோ இல்லையோ கண்டிப்பாக ஒட்டுமொத்த பங்களாதேஷ் நாட்டினரும் பார்த்திருப்பார்கள்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ்க்கும் ஆட்டத்திற்கும் பங்களாதேஷுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது

நேற்றைய ஆட்டத்தில இங்கிலாந்து தோற்க வேண்டும் என்று பங்களாதேஷ் ரசிகர்கள் பிராத்தனை செய்திருப்பார்கள். இங்கிலாந்து தோற்றால் பங்களாதேஷ் சுலபமாக கால்இறுதிக்கு சுலபமாக முன்னேற வாய்ப்பு இருந்தது.. ஆனால் அவர்கள் பிராத்தனை வீணாக போனது.

அதனால் இப்போது அவர்கள் தங்கள் கடைசி ஆட்டத்தில் வலிமையான தென் ஆப்பிரிக்கா அணியுடன மோத வேண்டும். தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து வெற்றிப் பெறுவது என்பது சவாலான ஒன்று.

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஏன்தான் இப்படி சொதப்புகிறார்களோ தெரியவில்லை. சொதப்பலுக்கு முக்கியமான காரணம் சரியான தலைமை இல்லை என்பதே.

நேற்றைய ஆட்டத்தில் அவர்கள் சுலபமாக வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். அப்படி வெற்றி பெற்றிருந்தால் ஆட்ட நாயகனாக வெஸ்ட் அண்டீஸின் ஆல் ரவுண்டர் ரசல் அறிவிக்கப்பட்ருந்திருப்பார்.

ஆல்ரவுண்டர் ரசல்


ஆனால் அப்படி எதுவும் நிகழ இங்கிலாந்து ஸ்பின்னர்கள் இடம் கொடுக்கவில்லை. டரேட்வெல் மற்றும் ஸ்வான் இருவரின் சுனாமி பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் கடைசி நான்கு ரன்களில் நான்கு விக்கெட்டுகள் இழந்தது பரிதாபமாக இருநதது.

‘பி‘ பிரிவில் மட்டும் ஒவ்வொரு ஆட்டம் முடிந்தவுடன் வரும் செய்திகளை படித்தால் தலை சுற்றிப் போகும். அவன் ஜெயித்து இவன் தோற்க வேண்டும். இவ்ன ஜெயித்து அவன் தோற்க வேண்டும் அப்போது இவன் அடுத்ததுக்கு போக, இவன் வெளியே போக என்று ஏக அடிதடிகள் நடக்கின்றன.

இன்றைய தினத் தந்தியை படிக்காதவர்களுக்கு கீழே உள்ள செய்தியைப் படித்தால் புரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று.

‘பி‘ பிரிவில் தென் ஆபபிரிக்கா மட்டுமே கால்இறுதியை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவின் கால்இறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி என்றாலும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை. வெற்றி பெற்றாலும் கால்இறுதி வாய்ப்பு உறுதியாகுமா? என்பதை அறிய இன்னும் 2 ஆட்டங்களின் முடிவுக்காக இங்கிலாந்து காத்திருக்க வேண்டும். அதாவது நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்கா – வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் தென் ஆபபிரிக்கா வென்றால் இங்கிலாந்து கால்இறுதிக்கு தகுதி பெற்று விடும். மாறாக வங்காளதேசம் வென்றால் அந்த அணி கால்இறுதிக்கு தகுதி பெறும். அதன் பிறகு இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (20-ந்தேதி) இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து அமையும்.
5-வது ஆட்டத்தில் ஆடி 2-வது தோல்வியை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கால்இறுதிக்கு முன்னேற கடைசி லீக்கில் இந்தியாவை வென்றாக வேண்டும்.

No comments:

Post a Comment