Monday, March 28, 2011

உலகக்கோப்பை 2011 – மூன்றாவது மற்றும் நான்காவது காலிறுதி

நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா

மூன்றாவது காலிறுதியில் யாரும் எதிர்பாராத திருப்பம், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்று அனைவரும் உறுதியாக இருந்த நிலையில் நியூசிலாந்து சுலபமாக தென் ஆப்பிரிக்காவை ஓவர் டேக் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்கா தான் விளையாடிய ஆறு லீக் ஆட்டங்களில் ஐந்தில் வெற்றிப் பெற்று ‘பிபிரிவில் முதல் இடத்தில் இடம்பெற்றிருந்தது. கண்டிப்பாக இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

நியூசிலாந்து அணியோ ‘ஏபிரிவில் நான்காவது இடத்தில் இடம் பெற்றிருந்தது. உலக கோப்பைக்கு முன்பு பங்களாதேஷ், மற்றும் இந்தியவிடம் மோசமாக தோற்றிருந்தது. உலக கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறுவதில் அந்த அணிக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.

ஆனால் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டதன் மூலம் அரை இறுதியில் இலங்கையுடனான ஆட்டம் பலத்த எதிர்பார்ப்பை உருவக்கியுள்ளது. இப்போது அந்த அணி ஆபத்தான அணியாக திகழ்கிறது..

அந்த அணியின் போலிங் பயிற்சியாளர் டொனால்டின் சிறந்த பயிற்சி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு பக்க பலமாக உள்ளது.

நியூசிலாந்து பல தோல்விகளை சந்தித்திருந்தாலும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட சிறப்பான ஒரு முடிவு அணி கேப்டன் பொறுப்பில் இருந்து வெட்டோரியை மாற்றாமல் இருந்ததுதான். இதன் மூலம் அணியில் பிளவு ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பொறுப்பில் இருந்த கெயிலை மாற்றாமல் இருந்திருநதால் ஒரு வேளை அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியிருக்க கூடும்.

இல்ங்கை இங்கிலாந்து

இங்கிலாந்து அணி தான் விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் பரபரப்பான முடிவை அளித்திருந்தது. இந்த நிலையில் இலங்கையுடனான காலிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவரையும் இங்கிலாந்து வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஏமாற்றி விட்டார்கள்.

இங்கிலாந்து அணியின் முன்னனி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிவிட்டதால் அந்த அணியின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சை அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை. மிகவும் கஷ்ட்டப்பட்டு 50 ஓவ்ர்களை தாக்குப் பிடித்ததே பெறும் பாடாகி விட்டது.

அதை விட பரிதாபம் இலங்கை அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் சரணடைந்ததுதான். .

அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ள இலங்கை அணியை பொறுத்த வரையில் அந்த அணி சுழற் பந்து வீச்சை பெரிதும் நம்பி உள்ளது. பேட்டிங்கில் முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அந்த அணியின் நிலைமை மோசமாகி விடும்.

நாளை நடக்க இருக்கும் நியூசிலாந்து இலங்கையுடனான ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணிக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment