Thursday, March 10, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 11

இந்தியா – நெதர்லாந்து

இதுவரை நடைபெற்ற 25 ஆட்டங்களில் இந்தியா – இங்கிலாந்து, அயர்லாந்து – இங்கிலாந்து ஆட்டம் தவிர அனைத்தும் பரபரப்பு இன்றி முடிந்தது ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

நேற்று நடைபெற்ற ஆட்டமும் எந்தவித விறுவிறுப்பும் இன்றி முடிந்தது போரடித்தது.

அது ஏன் இந்தியா மட்டும் சிறிய நாடுகளுடன் மோசமாக விளையாடுகிறது என்று தெரியவில்லை. சுலபமாக ஜெயிக்க வேண்டிய ஆட்டங்களில் எல்லாம் கஷ்ட்டப்பட்டு ஜெயிப்பது ரசிகர்களை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. போலிங்தான் வீக்காக உள்ளது என்று பார்த்தால், கடந்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங்கும் மோசம் முதல் நான்கு, ஐந்து விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்து விடுகிறார்கள். பிறகு ஆமை போல மெதுவாக ஆடி வெற்றி பெறுவது ஆர்வமுடன் ஆட்டத்தை பார்ப்பவர்களை ஏமாற்றி விடுகிறது.

நேறறைய வெற்றியின் மூலம் காலிறுதித்கு முன்னேறி விட்ட இந்தியாவிற்கு, வரும் இரண்டு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது. இந்த ஆட்டங்களிலாவது இந்தியா விறுவிறுப்புடன் விளையாடுமா? என்று ரசிகர்கள ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment