Wednesday, March 9, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 10

கனடா – கென்யா

கடந்த திங்கள் மோதிக் கொண்ட சிறியவர்களான கனடாவும் கென்யாவும் மோதும் ஆட்டம் ஆக்ரோஷமாக இருக்கும என்று யாராவது எதிர்பர்த்திருந்தால் அது மிகப்பெரிய தவறு.

நாங்க பெரிய அணிகளுக்கு எப்போதாவது அதிர்ச்சி கொடுப்போமே தவிர எங்களுக்குள்ள சாதாரணமாதான் ஆடிக்குவோம் என்பதுபோல இருந்தது அவர்களுடைய ஆட்டம்.

முதலில் ஆடிய கென்யா அணியினர் ஏனோ கனடாவை பார்த்து பயந்து போயிருந்தார்கள் போலிருக்கிறத- ஏற்கனவே பாகிஸ்தானை சற்று ஆட்டம் காண வைத்திருந்த கனடா அணியினரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தவர்கள் போல இருந்தது அவர்கள் ஆட்டம்.

200 ரன் எல்லாம் எடுத்தா கண்ணு பட்டு விடும் அதனால் 2 ரன் குறைவாக 198 ரன்னிற்கு, சரியாக 50வது ஓவர் முடிவில் ஆல் அவுட் ஆனதுதான் அவர்கள் ஸ்பெஷல்.

பின்னர் ஆடிய கென்யா அணியின் கேப்டன் திறமையாக! விளையாடி (வேற வழி இவங்ககூட ஆடலைன்னா அசிங்கமாயிடுமே) வெற்றிக்கு வழி வகுத்தார்.

கனடாவுக்கு ஒரு வெற்றியாவது கிடைத்தது, கென்யாதான் பாவம் வெற்றியே இல்லாம ஊருக்குப் போக வேண்டியிருக்கும் போலிருக்கு,

நியூசிலாந்து - பாகிஸ்தான்

தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதல் இடத்தில் இருநத பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தில் பாவம் நியூஸிலாந்திடம் அடி வாங்கியது கண் கொள்ளா காட்சி போங்கள்.

முதல் 45 ஓவரைப் பொருத்தவரைக்கும் பந்து வீசி கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு பெரிதாக ஒன்றும் பாதகம் ஏற்பட்டுவிடவில்லை. கடைசி 5 ஓவரில் நியூசிலாந்து வீரர் டெய்லர் அடித்தார் பாருங்கள் அப்படி அடித்தார். சிக்ஸர் மழையாக பொழிந்தார். அவருடன் சேர்ந்து மெக்குல்லமும், ஓரமும் பாகிஸ்தானை திணற, திணற அடித்தார்கள்.

எப்போ 50 ஓவர முடியும் ஓடிப்போயிடலாம் என்கிற அளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் நொந்து போயிருந்தார்கள்.

சரி பதிலுக்கு பதில் அடிப்பார்கள் என்று பார்த்தால் ஏற்கனவே அடி வாங்கின பாதிப்பு அவர்களை விடவில்லை போலிருக்கிறது. வந்த வேகத்தில் அவுட் ஆகி சென்றார்கள். 303 இலக்கு என்றால் 192க்கே ஆல் அவுட் ஆகி 110 ரன் வித்தயாசத்தில் தோற்றது மிகவும் பரிதாபம்..

ரசாக்கும், உமர் குல்லும் சுமாராக ஆடினார்கள். சரி கிட்டேயாவது சென்று தோற்பார்கள் என்று எதிர்பார்த்தற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ம்ஹும் முடியவே முடியாது. தலையே (அப்ரிடி) போய் விட்டது நாங்கள் ஏன் ஆட வேண்டும் என்பது மாதிரி ரசாக்கும் பந்தை தூக்கி அடித்து அழகாக கேட்ச் கொடுத்து விட்டு போய் விட்டார். அடுத்த மூன்றாவது பந்திலேயே அக்தரும் அவுட் ஆக ஆட்டம் முடிந்து விட்டது. இன்னும் 8 ஓவர் வேறு இருந்தது. ஆடத்தான் யாரும் இல்லை.

தொடர்ந்த 3 வெற்றி பெற்றதினால் அப்ரிடிக்கு தெரியாமல் வளர்ந்திருந்த கொஞ்சூண்டு அகங்காரமும் நசுக்கப்பட்டிருக்கும்.

நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் டொனால்டு, வேகப் பந்து வீச்சாளர்களை நன்றாக டிரில் எடுத்திருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் என்னவோ நியூசிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சு படு பயங்கரமாக இருந்தது. முதலில் ஆஸ்திரேலியா உடனான ஆட்டத்தில் தோற்றிருந்த நியூசிலாந்து இப்போது தேறி வருகிறது.

No comments:

Post a Comment