இங்கிலாந்து – நெதர்லாந்து.
செவ்வாய் கிழமை நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தும், நெதர்லாந்தும் மோதிக் கொணட்ன..
இதற்கு முந்திய ஆட்டங்கள் எல்லாம் மல்யுத்த போட்டியில் அனுபவம் வாய்ந்த குண்டான நபரும் அனுபவமற்ற ஒல்லியான நபரும் மோதிக் கொண்டால் என்ன ஆகும்? அந்த நிலமைதான் கிரிக்கெட்டிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கெதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து ஆடியது இங்கிலாந்துக்கு சவால் விடும் வகையில் இருந்தது.
முதலில் ஆடிய நெதர்லாந்து 292 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இங்கிலாந்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அணியின் நானகாவதாக களம் இறங்கிய டஸ்சாட் சதம் அடித்து அசத்தினார். 12வது ஓவரில் களம் இறங்கிய டஸ்சாட் 48வது ஓவர் வரை நின்று 110 பந்துகளில் 119 ரன்கள் (9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து) இங்கிலாந்து வீரர்களை சோதனைக்குள்ளாக்கினார்.
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்தின் துவக்கம் சிறப்பாக இருந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் பீட்டர்சன் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். இது அந்த அணிக்கு வெற்றி பெற அடித்தளம் இட்டது. பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஓவருக்கு சராசரி 6 ரன் ரேட் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்..
43வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 241 ரன்னிற்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது. 42 பந்துகளில் 52 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் விருவிருப்பாக இருந்தது.. ஆனால் நெதர்லாந்து அணியின் அனுபவமற்ற பவுலிங்கை பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து சுலபமாக வெற்றிப் பெற்றது. முக்கியமான கட்டத்தில் நெதர்லாந்து விக்கெட் எடுக்க தவறிவிட்டனர். மேலும் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து காலிங்வுட்டும், போபராவும் 8 பந்துகள் மீதம் இருக்கும்போதே இலக்கை எட்டியது. ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. குறைந்த பட்சம் கடைசி பந்து வரை ஆட்டம் நடந்திருந்தால் விறுவிறுப்பான ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியாவது ரசிகர்களுக்கு இருந்திருக்கும். இருந்தாலும் இதற்கு முந்தைய ஆட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த ஆட்டம் பரவாயில்லை.
பாகிஸ்தான் – கென்யா.
கென்யா அணியின் ஆட்டத்தில் முன்னேற்றமில்லை நியுசிலாந்திற்கெதிறான ஆட்டத்தில் தோற்றதை போலவே மறுபடியும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் இருந்தது.
பாகிஸ்தான் துவக்க ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுக்கவில்லை என்றாலும் பின்னர் வந்து வீரர்கள் சிறப்பாக ஆடி 300 ரன்களை கடந்து 317 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
எவ்வளவு இலக்கு இருந்தாலும் நாங்கள் எங்கள் வழக்கப்படிதான் ஆடுவோம் என்று கென்யா வீரர்கள் சபதம் எடுத்தது போல் மட மடவென்று அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். அப்ரிடி நன்றாக பௌலிங் செய்தார் வேகமாக 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 33,1 ஓவரில் கென்யா அணி 112 ரன்னிற்கு ஆட்டம் இழந்தது. நியுசிலாந்துக்கு எதிராக 69 ரன் இரட்டை இலக்கத்தில் ஆல் அவுட்டாகியிருந்தது. இப்போது சிறிது முன்னேற்றம் மூன்று இலக்க எண்ணில் 112 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனதுதான்.
வியாழன் நடக்கும் ஆட்டத்தில் மேற்கு இந்திய அணியும், தென் ஆப்ரிக்காவும் மோத இருக்கின்றன. பார்மில் இல்லாத மேற்கு இந்திய அணியை சிறந்த நிலையில் இருக்கும் தென் ஆப்ரிக்கா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
Thursday, February 24, 2011
உலகக் கோப்பை - 2
Labels:
cricket,
England,
Kenya,
Netherland,
Pakistan,
world cup2011,
உலககோப்பை 2011,
கிரிகெட்
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
ReplyDelete