Saturday, February 26, 2011

உலக கோப்பை – 2011 தொடர்ச்சி - 3

உலக கோப்பை – 7வது ஆட்டம்

உலக கோப்பை தொடங்கி முதல் நான்கு நாட்களாக நடைபெற்ற 3 ஆட்டங்களும் எந்தவித விருவிருப்பும் இன்றி முடிவுகள் அமைந்துவிட்டன. எல்லா ஆட்டங்களும் ஒரு பக்க ஆட்டமாக அமைந்தது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. கடந்த வியாழக்கிழமை இரண்டு பெரிய அணிகளான தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவு இடையே நடைபெற்ற ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. முதலில் ஆடிய மேற்கு இந்திய அணி தொடக்கமே ஏமாற்றமளித்தது.

முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான கேயலை மட்டுமே நம்பி மேற்கு இந்திய அணி ஆடுவதாக தெரிகிறது. அப்படி ஒருவரை நம்பி ஒரு அணி இருப்பது அந்த அணிக்கு நல்லதல்ல.

தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் முதல் ஓவரில் சுழற் பந்தை இறக்கி முக்கிய ஆட்டக்காரர் கேயலை ஆட்டம் இழக்க செய்தார். இது மேற்கு இந்திய அணியை நிலைகுலைய செய்து விட்டது. பின்பு வந்த வீரர்கள் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினாலும். கடைசி 5 விக்கெட்டுகள் வெரும் 24 நான்கு ரன்களுக்கும் ஆட்டம் இழந்து ஆல் அவுட் ஆனது. மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய அணி 222 ரன்களுக்குள் சுருண்டது.

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் 3 ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருந்தனர். புதிய ஸ்பின்னர் தாஹிர் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை கலங்கடிக்க செய்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் முன்னனி ஆட்டக்காரர்களை வீழ்த்தி விட, வேகப் பந்து வீச்சாளர் ஸ்டெயின் தன் பங்குக்கு கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் 5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் சதம் அடித்து அணியை சுலபமாக வெற்றி பெறச் செய்தார்.

ரிச்சர்ட்சுக்கு பிறகு மேற்கு இந்திய அணியில் மிகப்பெரிய கேப்டன் யாரும் இதுவரை உருவாகவில்லை. அணியின் வெற்றிக்கு கேப்டனின் பங்கு மிகவும் அவசியம். அது மேற்கு இந்திய தீவிற்கு இல்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த கவலை இல்லை. கெப்ளர் வெசல்ஸ், குரோனியே, ஸ்மித் என்று திறமை வாய்ந்த கேப்டன்கள் கிடைத்து விடுகிறார்கள்.

இப்பொழுதைய நிலையில் மேற்கு இந்திய தீவு அணி, பங்களாதேஷ், ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து உடனான ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிருதிக்கு தகுதி பெற முடியும். அந்த அணிக்கு மிகப் பெரிய சவாலாக பங்களாதேஷ் அணி உள்ளது. எனவே இனிமேலாவது அவர்கள் நன்றாக ஆடுவார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

உலக கோப்பை - 8வது ஆட்டம்

சமீப காலமாக நியூசிலாந்து அணி ஜிம்பாபே அணியை போன்று ஆடி வருகிறது. சென்ற ஆட்டத்தில் சிறிய அணியான கென்யாவை ஜெயித்ததை தவிர விடாமல் தோற்றுக் கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுடன் ஆடிய நேற்றைய ஆட்டத்திலும் எந்தவித போராட்டமும் இன்றி தோற்று போனது. நியூசிலாந்து நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது அந்த அணியை மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் எத்தனையோ மோசமான நிகழ்வுகள் இருந்தாலும் அந்த அணி போட்டி என்று வந்து விட்டால் எதிரணியுடன் ஆக்ரோஷமாக மோதுவார்கள். ஆனால் நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அப்படி ஆடுவது இல்லை ஏதோ கடமைக்கு ஆடி கொண்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றதை பெறிய வெற்றியாக கருத முடியாது. உண்மையான வெற்றி அடுத்து வரும் ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாõகிஸ்தானை வெற்றி பெறுவதில் தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவை பொறுத்த வரை வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களுடைய முனைப்பு அபாரமானது. அவர்கள் கடைசி பந்து வரையும் போராட கூடியவர்கள்.

உலக கோப்பை - 9வது ஆட்டம்

சம பலம் பொறுந்திய பங்களாதேஷ் - அயர்லாந்து ஆட்டம் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியது. முதலில் ஆடிய பங்களாதேஷை 205 ரன்களில் அயர்லாந்து சுருட்டியது ஆச்சரியமளித்தது என்றாலும் பின்னர் அவர்கள் நிலைத்து நின்று ஆட தவறிவிட்டார்கள். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்து கொண்டிருந்தார்கள். 45 ஓவரிலேயே ஆல் அவுட் ஆகி விட்டார்கள். கையில் பவர்பிளே இருந்தும் உபயோகமில்லாமல் போய் விட்டது. 50 ஓவர்கள் முழுவதுமாக ஆடியிருந்தால் ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம்.

தொடர்ந்து உப்பு சப்பில்லாத ஆட்டங்களை கண்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. அன்மையில் தினமணி கட்டுறையில் சிறிய அணிகளை உலகப் கோப்பையில் சேர்க்காமல் இருத்நால் நல்லது என்றும். அதற்கு மாற்றாக உலக கோப்பை அல்லாத தொடர்களில் பெரிய அணிகளுடன் விளையாட அனுமதிப்பது சிறப்பாக இருக்கும் என்றும் இதன் மூலம் உலக கோப்பையில் பெரிய அணிகள் இடம் பெரும் ஆட்டங்கள் அனைத்தும் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று செய்தி வெளியிட்டிருந்தது வரவேற்க்கத்தக்கது.

No comments:

Post a Comment