Thursday, February 24, 2011

உலக கோப்பை - 2011 - 1

முதல் மேட்சில் இந்தியாவும் பங்களாதேஷும் மோதிக் கொண்டன. ஆட்டத்திற்கு முன்பே ஷேவாக் இந்த முறை பங்களாதேஷை பழி தீர்ப்போம் என்று கூறியிருந்தார். கடந்த உலக கோப்பையில் முதல் சுற்றில் பங்களாதேஷிடம் தோற்றதை அவர் மற்ககவில்லை என்பதை அவர் ஆட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் ஒரு பக்கம் பஙகளாதேஷின் பவுலிங்கை அடித்து துவைக்க மறுபுறம் வீராட் கோளி அலசி காயப் போட்டார். இந்தியாவின் ஸ்கோரைப் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது இந்தியா வெற்றி பெறும் என்று அதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் பங்களாதேஷும் ஓவருக்கு ஏழு அடிக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி வரை ஆறு ரன்னிற்கு கீழேயே அடித்தார்கள். அவர்களுக்கு ஆறுதலா அமைந்தது ஸ்ரீசாந்தின் பவுலிங் மட்டுமே ஒரே ஒவரில் 5 பவண்டிரி கொடுத்தார்.

மற்ற லீக் ஆட்டங்களில் இலங்கையும், நியூசிலாந்தும் மிகப் பெரிய வெற்றியை பெற இந்தியா 83 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெரும்பாலான ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இன்னும் குறைந்த ரன்களில் பங்களாதேஷை சுருட்டியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார்கள். ஆனால் உன்மையில் இந்தியா அந்த பேட்டிங் பிட்சில் சிறப்பாகவே பவுலிங் செய்தார்கள். ஸ்ரீசாந்தை தவிர. அடுத்த ஆட்டத்தில் கண்டிப்பாக ஸ்ரீசாந் இருக்க மாட்டார். அவருக்கு பதில் நெஹரா அல்லது ஒரு ஸ்பின்னர் இடம் பெறலாம்.

நியூசிலாந்து, கென்யா ஆட்டம் ஞாயிறு காலை தொடங்கியது. ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருப்பதற்குள் ஆட்டம் முடிந்து மேன் ஆப் த மேட்ச் கொடுத்து கொண்டிருந்ததை பார்க்கும்போது சோகமாக இருந்தது.. கென்யா ஆமை ஓட்டிற்குள் சுருண்டு கொள்வதைப் போல வெறும் 69 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியுசிலாந்து அதை 8 ஓரில் அடித்து வெற்றி பெற்று விட்டார்கள். சரி இதுதான் சீக்கிரம் முடிந்து விட்டது அடுத்து மதியம் தொடங்கிய இலங்கை, கனடா ஆட்டமாவது முழுதாக ஆடுவார்கள் என்று எதிர்பார்த்தது தவறாக போனது. இலங்கை அடித்த 332 இமாலய ஸ்கோரை அடிக்க முடியாமல் கனடா 37 ஓவரில் 122 ரன்னிற்கு பரிதாபமாக தோற்றுப் போனது. மறுநாள் திங்கட்கிழமை நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலயவிடம் ஜிம்பாபே மோசமாக தோற்றதை பார்க்கும் போது ஏன் இந்த சிறிய அணிகளை எல்லாம் உலக கோப்பை ஆட்டத்தில் சேர்க்கிறார்கள் என்று ரசிகர்களுக்கு தோன்றியது. மறுநாள் அதற்கேற்றாற்போல செய்தியில் அடுத்த உலக கோப்பை ஆட்டத்தில் 10 அணிகள் மட்டுமே போட்டியிடும் என்றும், சிறிய அணிகளை 20./20 உலகக் கோப்பைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் ஐ.சி.சி. அறிவித்திருந்தது. இது சிறிய அணிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு பெரிய அணியுடன் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதே அபூர்வம். இந்த நிலையில் நீ உலக கோப்பையில் ஆட வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் எப்பொழுதுதான் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வது. இலங்கை அணியும் ஆட ஆரம்பித்த புதிதில் விடாமல் தோற்று கொண்டுதான் இருநதார்கள். இன்று உலக கோப்பையை வெல்லும் ஒரு அணியாக கருதப்படும் அளிவிற்கு வளர்ந்து நிற்பதை நாம் மறந்து விடக்கூடாது. இதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை ஐ.சி.சி மறுபரிசீலனை செய்தால் நல்லது.

No comments:

Post a Comment